WELCOME

MY FRIENDS

Saturday, October 26, 2013

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

வீடு கட்ட ப்ளான்
பண்ணுபவர்களுக்கு உதவும்
இலவச மென்பொருள்!

நீங்களோ அல்லது உங்கள்
நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான்
பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது ச
தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த
SWEET HOME 3D ( http://
www.sweethome3d.com/
index.js )மென்பொருள் மிக உபயோகமாக
இருக்கும். மேலும் இது இலவசமாக
கிடைக்கும் என்பதை நோட பண்ணிக்
கொள்ளவும்
இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில்
மனதில் தோன்றுவதை வரைபடமாக
வரைய உதவும் அதே நேரத்தில்
கட்டிடத்தின் முப்பரிமாண
தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும்
கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட்
இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்
பொருளின் சிறப்பாக சொல்லலாம்.
கட்டில் சேர் போன்ற இண்டீரியர்
பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின்
பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம்
தேவைக்கேற்ப
பொருத்தி பார்த்து அறையின்
அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக
எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட்
அல்லது 3D Home Architect
உபயோகித்திருந்தால் இந்த
மென்பொருளை உபயோகிக்க எந்த வித
சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள்
உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக
விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள்
அனைத்தும் சென்டி மீட்டரில்
உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10
அடி எனில் அதை முதலில்
செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி =
305 செ.மீ.
மேல் வரிசையில் plan மெனுவில் create
walls என்பதை க்ளிக் செய்யவும். பின்
வலது பக்க பேனலில் க்ளிக்
செய்து அறை அளவுகளை கொடுத்து வரை
ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற
அமைப்பு மட்டும் வந்தால் போதும்
மற்றவற்றை எடிட் பண்ணும்
வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட்
செய்ய வேண்டும் என
விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள்
க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள்
தனி விண்டோவில் தெரியும் அதில்
நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும்
உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட்
வின்டோஸ்
ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும்
கதவை தேர்ந்தெடுத்து ட்ராக்
செய்து ப்ளானில் தேவைப்படும்
இடங்களில் வைத்து விடுங்கள்.
விண்டோவிற்கும் இதே முறையில்
செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம்,
சமையலறை மற்றும் ஹால்களுக்கான
பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக
இருப்பதால்
நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து
எடிட்
ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையா
அளவுகளை மற்றும்
கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.
லிங்க் :: http://www.sweethome3d.com/
index.jsp

Wednesday, October 23, 2013

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்
கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில்
செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம்
ஓய்வெடுக்க விரும்பினால், அதன்
இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல்,
சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம்
. இதனால், மின் சக்தி மிச்சமாகும்.
அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான
வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது.
அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும்
Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep
என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள்,
லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு,
மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக
உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப்
புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம்
மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப்
பெறுபவையாக இருக்கும். இவற்றைச்
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1. ஸ்லீப் மோட் (Sleep mode):
இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி.
டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப்
பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச்
செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன்
போட்டு நிறுத்துவது போல இந்த
செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில்
மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும்
நிறுத்தப்படுகின்றன.
திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும்
அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில்
வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும்
கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில்
இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ
"Standby” என்பது போலத்தான். சிறிய காலப்
பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த
வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம்.
இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர்
அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில
்லை.
2. ஹைபர்னேட் (Hibernate): இந்த நிலையில்,
திறந்து வைத்து நாம் பயன்படுத்தும்
டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும்
அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட்
டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன.
மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிற
து. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில்,
செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும்
உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம்
லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப்
போவதில்லை என்ற சூழ்நிலையிலும்,
அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும்
வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம்
இல்லை என்றாலும், இந்த
நிலையையே பயன்படுத்த வேண்டும்.
3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep): மேலே 1
மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும்
ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த
நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களு
க்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது,
திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன்
புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட்
டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் மிகவும் குறைவான
மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன்
மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு
வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக்
கொள்ளப்படுகிறது.
இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில்,
விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில்
செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரில்,
இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது.
இதனை இயக்கியவுடன், இது உங்கள்
கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப்
நிலையில் வைக்கிறது.
இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில்,
மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய்
இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது,
மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில்,
விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்த
ு அவற்றை எடுத்து இயக்குகிறது.
4. எப்படி பெறுவது?: Sleep மற்றும் Hibernate
நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள
ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில்
பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால்,
அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில்
ஒன்றாக இருக்கலாம்.
1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப்
நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம்.
அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட்
நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட்
செய்திடும் ட்ரைவர்
புரோகிராமை இறக்கி இயக்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில்,
உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத
பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும்,
இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.
3. மின்சக்தி மிச்சப்படுத்தும் வழ

Tuesday, October 22, 2013

சமையல் டிப்ஸ்

**** சமையல் டிப்ஸ் ****
---------------------------------------------
--------
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில்
சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய
தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய
டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.
ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள்
வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப்
போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில்
போட்டால் புளிக்கவே புளிக்காது.
காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர்
வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள்
போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.
பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில்
வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.
காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில்
டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய
பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில் உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல்
சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத் துணியில்
முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த
மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல்
சுவையாக இருக்கும்.
சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால்
உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால்
அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி,
அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெக்சன் ஏற்படுத்துவது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம்
லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட்
கணிணிக்கு இண்டர்னெட் கனெக்சன்
ஏற்படுத்துவது எப்படி?
ஒரு ஆன்ராய்டு மொபைல் மூலம்
என்னவென்னாலும் இருந்த
இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற
நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன
தொழில் நுட்பம்.
இந்த பதிவு மூலம் நாம் பார்க்க
போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம்
லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள்
கணிணிக்கு எவ்வாறு வைஃப்பி (wi-fi)
தொடர்பு மூலம் இண்டர்னெட்
இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க
போகிறோம்.
வேண்டிய அமைவு முறை:
இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள்
மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில்
இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும்
அதில் வைஃப்பி மூலம் இணைய
இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர்
நிறுவபட்டு இருக்க
வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள்
மொபைல் நிறுவன கைடை பார்க்கவும்.
சரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்
step--->1 மொபைலில்setting
மெனுவுக்கு போகவும்
step--->2 அடுத்து wireless and network
செல்லவும்
step--->3 அடுத்து Tethering and portable hotspot
செல்லவும்
step--->4 அதில் portable wi-fi hotspot setting
என்பது கானப்படும்.அதை கிளிக்
செய்யவும்.
step--->5 இதனுள் இரண்டு மெனுக்கள்
கானப்படும்.அதில் configure portable wi-fi
hotspot என்பதை கிளிக் செய்யவும்.
step--->6 அதில் Network SSID என்பதில் தங்கள்
மொபைல்மாடல் பெயர்
கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால்
உங்கள்
பெயரை வைத்து கொள்ளலாம்.
step--->7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள்
உங்கள் இணைய இணைப்பை
யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open
என்பைதை
தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன்
படுத்த
WAP2PSK என்பதைதேர்ந்தெட
ுத்து பாஸ்வேர்டு அமைத்து
கொள்ளலாம்.பிறகு save கொடுக்கவும்.
step--->8 மேல் புறம் save கொடுத்த
பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக்
செய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன்
ஒரு புதிய
லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய
ஊதா நிற
சிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள்
மொபைல் ஒரு
இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட
தொடங்கி விட்டது.இனி
உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட்
பி.சி யில்
இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.

Monday, October 21, 2013

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு

கணணியில் உங்களது இரகசிய
தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும்
ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.
அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால்,
உங்களது இரகசிய
தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல்,
தகவல்களை மறைக்கலாம்.
இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக்
செய்யவும். இப்போது command Prompt ஓபன்
ஆகும்.
இதில் C:Documents and Settingscontent
இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள்.
(எந்த Drive க்குள் நீங்கள் Folder
வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும்.
Ex: E:, F:, G:, etc )
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த
டிரைவ் வந்து இருக்கும். இப்போது
D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your
Folder Name). அவ்வளவு தான்
உங்களது கோப்பறை இனிமேல்
மறைத்து வைக்கப்படும்.
தற்போது உங்களது கோப்பறையை மீண்டும்
தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name கொடுத்தால்
போதும்.
இந்த முறையில் C டிரைவில் உள்ள
கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது

Saturday, October 12, 2013

பாட்டி வைத்தியம்

பாட்டிவைத்தியம்
இது வீட்டு வைத்தியம்
அருமருந்தான அருகம் புல்....
இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின்,
தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர்
சப்பாத்திமாவுடன்
சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர்.
இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு
எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன்
கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி,
மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான
எடை ஆகியவை குணமாகும்.
பல் ஈறு நோய்களுக்கு.....
எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப்
பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால்
பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால்
கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம்
சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல
காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில்
குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம்
பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு
விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள்
செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல்
ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில்
ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும்
எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும்,
பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால்
மேற்கண்ட நோய்கள் தீரும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம்
சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­
ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில்
நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால்
வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும்.
எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5
கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15
மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல்
களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக
இருக்கும்
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்
கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர,
அவை நாளடைவில் மறைந்து விடும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில்
துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க
வலி குறையும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும்
சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம்
வரை எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில்
கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள்
முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்,
ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்.
கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால்
நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கு...
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக
வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக
ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள்
ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும்
சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும்
ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய்
சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால்,
உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம்
உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து,
உதடுகளில் தடவி வந்தாலும்,
உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள்
மென்மையாகும்.
கட்டி கரைய....
கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும்
தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல
ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக்
கரைஞ்சிடும்.
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம்,
குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக
அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய
வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.
குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80
பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில்
30 மிலி அளவு காலை,
மாலை இருவேளை அருந்தி வர தலைவலி,
மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல்,
வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு,
ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும்
இருவேளை உட்கொண்டு வர
ஆஸ்துமா முதலிய சுவாச
நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
அம்மை நோய் கண்டவுடன்
துளசி இலைகளையும், குங்குமப்பூவையும்
சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க
அம்மை நோய் குணமாகும்.
குங்குமப் பூவில் போலி நிறைய உண்டு.
தேங்காய் துருவலில் வண்ணச்சாயத்தை ஏற்றி,
காய வைத்து சிறிது 'saffron' essence
கலந்து விற்கிறார்கள். அவை மலிவாக
கிடைக்கும். தரமான குங்குமப்பூ ஒரு கிராம்
விலை சுமார் ரூ. 500 இருக்கும். உண்மையான
குங்குமப்பூவைத் தேர்வு செய்து வாங்கிப்
பயனடையுங்கள்!
நோய் எதிர்ப்பு சக்திக்கு......
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான்
பொற்கொடி போன்ற பெயர்களால்
வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில்
தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ'
அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய
முறையில் உபயோகித்தாலே பல
நன்மைகளை அடையலாம்.
வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச்
சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன்
சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும்,
உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய்
எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள்
வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும்
சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால்
உடல் பருமன் குறையும்.
இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல்
தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில்
இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள்
காமாலை முதல் அனைத்து வகையான
காமாலை நோய்களுக்கும் மிக
முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.
உடற்சூட்டுக்கு.........
வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப்
பிடிக்காது. ஆனால்
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற்
சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால்
உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில்
வெந்தயத்தை போட்டு 10 நிமிடம்
விட்டு சாப்பிட்டு வந்தால்
உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும்
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ
அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால்
உடலிலுள்ள
சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும்
வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீரில்
ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம்
கிட்டும். பொதுவாக பாலூட்டும்
தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த
வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்
போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த
மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின்
போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும்.
இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப்
பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக்
காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும்
தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள்
வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ
வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால்
அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில்
வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக்
காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது.
தலை முடி கொட்டுவதை நிறுத்த,
வெந்தயத்தை தண்ணீரில் ஊற
வைத்து வெண்ணெய் போல அரைத்து,
தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற
வைத்து குளிக்க வேண்டும்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு.....!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன்
மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய
தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில்
மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம்
முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம்
பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.
அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம்
நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.......
* குழந்தை பெற்ற
பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில்
பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால்
தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம்,
பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள
அழுக்கை அகற்றும்
தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில்
பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால்
வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும்
ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான்
கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச
உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம்
சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன்
பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று
பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம்
ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும்
சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும்
ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும்
சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த
உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும்
குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும்
வாய்ப்பு இல்லாதவர்கள்
பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால்
வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும்
வாய்ப்பு அதிகம்.
தெரிந்துகொள்வோமா....
*
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு
முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ்
எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக்
குழாயிலே கொலஸ்ட்ரால்
படியாதவாறு தடுக்கும்.
* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம்,
பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள்
உள்ளன.
ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம்
சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல்
சீராக நடைபெற்று வரும்.
* தேங்காய் பயன்படுத்தும் உணவுகளில்
கூடிய வரை தேங்காயைக் குறைத்துக்
கொண்டு, டோஃபு எனப்படுகிற
சோயா பனீரை சேர்க்கலாம். கொழுப்புச்
சத்து அதிகமுள்ளவர்களுக்கும், இதயப்
பாதிப்பு உள்ளவர்களுக்கும், எடை குறைக்க
நினைப்போருக்கும் ஏற்றது இந்த டோஃபு.
* லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்த
தண்ணீரை பாட்டிலில் நிரப்பி வைத்துக்
கொண்டு, தினம் ஒரு முறை வாய்
கொப்பளிக்கலாம். இயற்கையான மவுத்
வாஷான இது, வாய் நாற்றத்தைக் தவிர்க்கும்.
* குழந்தைக்கு மார்பிள் சளி கட்டிக்கொண்டால்,
வெற்றிலையில் தேங்காய் எண்ணையைத்
தடவி விளக்கில் சூடுபடுத்தி இளம் சூட்டில்
மார்பில் பற்றுப்போடலாம். சளி கரைஞ்சிடும்.
சில குழந்தைகளுக்கு தலையில்
சூடு இருக்கும்.
இதுக்கு குங்குமப்பூவை அரைச்சு பத்துப்
போடலாம்.
* தினம் ஒரு கேரட்டை பச்சையாக
கடிச்சி சாப்பிட்டால் வாத நோய் ஏற்படற
வாய்ப்பு 68 சதவீதம் தவிர்க்கப்படுகிறது.
* வேலைக்கு போற பெண்கள் சிலர்
அவசரத்துல சாப்பிடக்கூட மாட்டார்கள்... அந்த
மாதியான பெண்கள் காபி குடிக்கிற டம்ளர்ல
ஒரு டம்ளர் கேப்பைக்கூழ்
குடிச்சிட்டுப்போகலாம்.
பசி அடங்குவதோடு உடம்புக்கு சத்தையும்
தரக்கூடியது கேப்பைகூல்.
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்.
தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க்
குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால்
பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல்
மறைந்துவிடும்.
தொண்டை வலிக்கு
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம்
எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள்
தொண்டை வலி நீங்கும்.
இருமல் தொல்லைக்கு
தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில்
1 ஸ்பூன் உப்பு போட்டு வாய்
கொப்பளிக்கவும். இது இருமல்
தொல்லையையும் நீக்கும்.
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
வாழைபழத்தோலை அந்த காயத்தின்
மீது வைத்து காட்டுங்கள். ரத்த
போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
அதற்கு முன் காயத்தை நன்றாக
வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
இருமல் சளிக்கு
தூதுவளை இலை 15 கிராம் அளவில்
சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200
மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல்
40
மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை
இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால்,
இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல்,
சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய்
மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள்
உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள்
சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும்
அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள்
கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள
பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
மேனி பளபளப்பு பெறும்.
தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில்
மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில்
சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்
கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர,
அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக்
கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்.
இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக்
கொண்டிருந்தால் தொண்டைக்
கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்.
தொண்டையில் உள்ள
சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும்
சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம்
எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில்
கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய
நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்,
ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்.
கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால்
நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும்
பனங்கற்கண்டு இரண்டையும் சம
அளவு எடுது கஷாயம்
வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து
மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால்
வரட்டு இருமல் சளி குணமாகும்.
கொய்யாப்பழத்தில் சத்து உள்ளது என்பதுபோல்
அதன் இலையிலும்
மருத்துவத்தன்மை உள்ளது என்று எத்தனை
பேருக்கு தெரியும் என்பது தெரியாது.
வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் ஆற்றல்
படைத்தது கொய்யா இலை என்றால்
அது மிகையல்ல........
* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­
ணீருடன் வெற்றிலையையும், மிளகையும்
போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம்
உப்பு மற்றும் மிளகுத்தூள்
ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில்
வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க
குளிக்கும் நீரில்
துளசி இலைகளை போட்டு குளிக்கவும்.
விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும்
இருமலுக்கு நீருடன்
தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல்
நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன்
கொஞ்சம் தேன்
கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால்
உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த
கொய்யா இலைகளை மென்று தின்றால்
போதுமானது.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த
மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த
சோகையால் ஏற்பட்ட
சோர்வு முதலியவை நீங்கும்.
உடலுக்கு புத்துணர்வை தரும்.
நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத்
தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில்
தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன
அழுத்தம் நீங்கும். உடலில்
தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில
வியாதிகள் குணமடையும்.
நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து.
யானைக்கால் வியாதி, கண்ணோய்,
காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த
மருந்து.
இஞ்சி சாறு:
நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்
என்றார்கள். இம்மூன்றையும் தினமும்
உட்கொண்டால் நோய்
என்பதே நம்மை நெருங்காது.
இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும்
அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப்
பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம்,
போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற
மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல்
கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.
கரிசலாங்கண்ணிச் சாறு:
கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம்,
காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில்
இரத்தம் வெளியேறுதல்
போன்றவற்றை குணப்படுத்தும். இதன்
சாறை காலையில் அருந்துவது நல்லது.
அல்லது மதிய உணவுக்குப்பின் சூப்
செய்து அருந்தலாம்.
பொன்னாங்கண்ணிச் சாறு:
பொன்னாங்கண்ணி பல வகையான தைல
வர்க்கத்தில் அதிகம்
உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த
பொன்னாங்கண்ணி கீரையை சூப்
செய்து காலை மாலை இருவேளை என 15
நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள்
ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக்
குறைத்து உடலுக்கு புத்துணர்வை
கொடுக்கும்.
தூதுவளைச் சாறு:
வறட்டு இருமல், தொண்டைக் கட்டு,
தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம்
உள்ளவர்கள் தூதுவளைச்
சாறு அருந்தி வந்தால் சளித்
தொல்லையிலிருந்து விடுபடலாம்.
அருகம்புல் சாறு:
அருகம்புல்
சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன்
உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது.
உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர்
அனைத்தையும் வெளியேற்றுகிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு:
தண்ணீர் விட்டான் கிழங்கின்
சாறை எடுத்து தினமும் காலையில்
அருந்தி வந்தால் உடல்
சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும்
வெள்ளைப் படுதலைத் தடுக்கும்.
தாது புஷ்டியை கொடுக்கும்.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக்
குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு சாறு:
வெள்ளைப் பூண்டு சாற்றை காதில்
இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம்
குறையும். உள்நாக்கில் தடவினால்
உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும்.
மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம்
அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின்
மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும்
தடவலாம்.
வெற்றிலைச் சாறு:
வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில்
சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த
மருந்தாகும். சளியைப் போக்கும்.
காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து.
அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத்
தூண்டும்.
வேலிப்பருத்தி சாறு:
சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த
மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க
சூலைக்கு இதன் சாறு தேன்
கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும்.
கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத்
தடவலாம்.
குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில்
போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ்
நீரை முழுங்கி விடவும்.
தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன்
ஆவியை தொண்டையில் படும்படி செய்தால்
தொண்டை புண் ஆறும்.
அல்லது கிராம்பை தணலில்
வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண்
ஆறும்.
தொண்டை நோய்:
மாதுளம்
பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும்
கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி,
ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில்
கலந்து சாப்பிட
தொண்டை கரகரப்பு குணமாகும்.
அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம்
செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான
பிணி அகலும்.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில்
போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால்
தொண்டைக்கட்டு குணமாகும்.
அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில்
கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல்
தீரும்.
தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம்
எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில்
கலந்து அடுப்பில்
வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைக்கவும்.
தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில்
விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும்
ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள்
கொப்பளிக்க குணம் தெரியும்.
தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும்
சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில்
தடவிவர குணமாகும்.
அல்லது துளசி தைலத்தை அரைத்
தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை
கொப்பளித்து வர குணம் தெரியும்.
ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில்
காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய்
கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கு
இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன்
காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில்
சிறிதளவே சதை காணப்படும். அதிக
இடத்தை கொட்டைதான்
அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில்
கரிசல்காடுகளில் தானாக
முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த
பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன்
காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ'
சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம்
காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும்,
எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம்
உதவிபுரிகிறது. இது உடல்
உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த
பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும்
களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில்
காணப்படும். களாக்காயாக
இருக்கும்போது ஊறுகாய் போட
பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன்
காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச்
சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ'
அதிக அளவில் உள்ளது. ஜீரண
சக்தியை அதிகரிக்கும்
தன்மை களாப்பழத்திற்கு உண்டு.
உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால்
உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக
பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக
தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம்
குணப்படுத்துகிறது. உடல்
சூட்டினை சமன்படுத்தும்
தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.
ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில்
மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக
இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக
புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில்
வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும்,
சுண்ணாம்புச்சத்தும் அதிகம்
காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத்
தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால்
உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப்
போக்கும். நாவறட்சி மாறும்.
வாந்தியை நிறுத்தும்.
தலைவலியை குணப்படுத்தும். சொறி,
சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச்
சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக
குணமடையும்.
வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும்
விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக
முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும்.
பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும்
தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல்
பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும்.
சொரி, சிரங்கு மற்றும்
தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த
பழங்களை சேகரித்து அதை நீர்
விட்டு கழுவி தோலையும், கொட்டையும்
எடுத்துவிட்டு சுத்தமான துணியில்
வடிகட்டி எடுக்கவும். எந்த
அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த
அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான
களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு,
அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச
வேண்டும். பாகுபதம் வந்த சமயம்
இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில்
ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை,
மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால்
சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும்.
பித்தம் தொடர்பான நோய் தீரும்.